தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி
கலைக்கழகம்-கவிதை

Tuesday, May 23, 2017

அம்மா


உன்னுள் நான் இருக்க
பார்த்து பார்த்து என்னை
பக்குவமாய்……


பெற்றெடுத்-தாய்……………!!
தவறி விழுந்து நான்
அழ
காரணமின்றி நீ அழு-தாய்…………….!!
எனக்கு உணவூட்ட
நீயும் குழந்தை ஆனாய்……….!!
அப்பா என்னை அதட்ட
அவரை நீ மிரட்டினாய்……!!


தாய் மட்டும் அல்ல
முதல் தோழியும் நீதான்………!
அன்பின் உண்மையும்
காதலின் அர்த்தமும்
உன்னிடம் கற்றுக்கொண்டேன்………!!
அன்று நீ  தந்த
தண்டனைகளின்  அர்த்தத்தை
இன்று புரிந்து கொண்டேன்………!!
என்னை சுமந்த உன்னை
நான் சுமக்க விரும்ப வில்லை………….


நான்கு பேர்  என்னை  சுமக்கும் வரை
என்னுடன் நீ இரு
அது போதும்…...

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.