தனிமையாக வாழ்ந்திடுவேன் ..............
கொத்து கொத்தாய்
போட்ட
கொத்து குண்டு போல
என் மனம் சிதறிவிட்டதடிவரைந்து வைத்த உருவம் போல
கண்ணாடி என்னையே காட்டுகிறதே
காலம் பூராகவும் உன்னை காட்டுமென
காத்திருந்தேன்
ஆனால்
வாடிப்போன மலரைப்போல
மாறிவிட்டதே என் உயிரடி
மணல் வீடு தான் கட்டியிருந்தேன்
காதலில்
ஆழ்கடல் அலை போல புரட்டி
எடுத்தாயே எனது இதயகூட்டை
கும்பிட்டு கேட்கிறேன்
கோமாதா உன்னை ..கோலமிடும்
பெண்ணும் வேண்டாம்
கோகுலம் போற்றும் கோதையும் வேண்டாம்
சாகும் வரை தனிமையாக வாழ்ந்திடுவேன்
கடைசி வரை மனித பிறப்பு வேண்டவே
வேண்டாம்
எழுதியவர் - குட்டி கவி
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.